Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:28 IST)
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாலா சமீபத்தில் அளித்த நேர்காணலில் தன்னுடைய திரை வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் கட்வுள் படத்தில் அஜித் வந்தது எப்படியென்றால் அவர் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் என்பதை விட- எப்படியும் நான் அவரை அந்த கதாபாத்திரத்துக்குள் கொண்டு சென்றுவிடுவேன் – நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது இருவரின் ஆசையாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments