Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலா இப்ப தண்ணி அடிக்கிறாரா?... மேடையில் தடாலடி கேள்வி கேட்ட மிஷ்கின்!

பாலா இப்ப தண்ணி அடிக்கிறாரா?... மேடையில் தடாலடி கேள்வி கேட்ட மிஷ்கின்!
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:47 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் விளக்கக் கடிதம் வெளியானது. அதன்பின்னர் இயக்குனர் பாலா கதையில் சில மாற்றங்களை செய்து அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் வணங்கான் படத்தை தொடர்ந்து ஷூட்டிங் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் டைனோசர்ஸ் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கின் அருண் விஜய் மற்றும் விஜய்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மிஷ்கின் “என் பாலா திரும்பி வரவேண்டும். இந்தியாவின் சிறந்த இயக்குனர் என் அண்ணன் பாலா. இப்போது அருண் விஜய் அவரோடு இணைந்து பணியாற்றுகிறார். நான் அருணிடம் கேட்டேன் ‘இப்போ பாலா தண்ணி கிண்ணி அடிக்கிறாரா என்று’. அவன் சுத்தமாக இல்லை என்று கூறினான்.” என மேடையில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

KGF யாஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?.. லிஸ்ட்டில் இரண்டு இயக்குனர்கள்!