Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா… வணங்கான் பற்றிய கேள்விக்கு அளித்த பதில்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:21 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

நாச்சியார் படத்துக்குப் பின்னர் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  படத்தின் டைட்டில் வணங்கான் என்று அறிவிக்கப்பட்டது. இடையில் இயக்குனர் பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே எழுந்த மோதல் காரணமாக படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது வணங்கான் திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இயக்குனர் பாலா மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே எடுத்தக் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பாலாவிடம் பத்திரிக்கையாளர்கள் வணங்கான் படம் எப்படி வந்திருக்கு எனக் கேட்க, அதற்கு “வந்திருக்கு இல்ல… வந்துட்டுருக்கு “ என்றார். மேலும் வணங்கான் படத்தில் ஏதாவது பிரச்சனையா எனக் கேட்க , சிரித்துகொண்டே “யாருக்கு உங்களுக்கும் எனக்குமா” என மழுப்பலான பதிலைக் கூறி சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments