Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

Advertiesment
Bollywood

vinoth

, வியாழன், 27 மார்ச் 2025 (11:16 IST)
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி இருவருமே இதுவரை இருவருமே வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் நேற்று மும்பையில் ஐஸ்வர்யா ராய் சென்ற காரின் மீது பேருந்து மோதியதாகவும், அதில் காயமான அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. ஆனால் முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் விபத்த் நடந்த காரில் ஐஸ்வர்யா ராய் பயணிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!