Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’தனுஷின் படம் அசுர வெற்றி பெரும்’’ … கலைப்புலி எஸ்.தாணு நம்பிக்கை

’’தனுஷின் படம் அசுர வெற்றி பெரும்’’ … கலைப்புலி எஸ்.தாணு நம்பிக்கை
, புதன், 9 டிசம்பர் 2020 (17:13 IST)
தனுஷின் ’கர்ணன்’ படம் மிகப்பெரும் வெற்றி பெரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர்  கலைப்புலு தாணு தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்‘ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’கர்ணன்‘ படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது என்பது தெரிந்ததே

 இந்த நிலையில் இன்றுடன் ’கர்ணன்‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனது டுவிட்டரில் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பாக சந்தோஷ் நாராயணனுக்கு தனது சிறப்பு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் லாக்டவுன் நேரத்தில் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தைக் குறித்து கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில்,
இத்தகைய கடும் சூழலிலும் #Karnan படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்லபடியாக முடித்து தந்தமைக்கு @dhanushkraja, @mari_selvaraj, @Music_Santhoshமற்றும் மொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். @KarnanTheMovie திரைப்படம், அசுரவெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ போராடியிருக்க வேண்டும் சித்ரா!!! பிரபல நடிகர் உருக்கம் !!