Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் கதை இதுதான்!

தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் கதை இதுதான்!
, வியாழன், 2 ஜனவரி 2020 (21:30 IST)
தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டன. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி விட்டது. சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த படத்திற்கான செட் பிரமாண்டமாக போடப்பட்டு உள்ளதாகவும் அதில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் முதல் படத்தில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனையை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்தது. அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை விஜய் மனைவிக்கு விருது... ரசிகர்கள் மகிழ்ச்சி !