Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (08:56 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், இந்த தம்பதியின் மகன் பட்டம்ளிப்பு விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து தங்கள் மகனை கட்டி அணைத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
கடந்த 2004ஆம் ஆண்டு, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். அதன் பின், நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு 27ஆம் தேதி சட்டப்படி விவாகரத்து வழங்கப்பட்டது.
 
விவாகரத்து பெற்று பிரிந்தாலும், தங்கள் மகன்களின் பள்ளி  நிகழ்ச்சிகளில் அவ்வப்போது இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். இப்போது, மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
 
இருவரும் சேர்ந்து பட்டம் பெற்ற தங்கள் மகனை கட்டி அணைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "பெருமைக்குரிய பெற்றோர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments