Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி கதை கேட்ட இயக்குனர்… வளைத்து போட்ட இளம் இயக்குனர்!

ரஜினி கதை கேட்ட இயக்குனர்… வளைத்து போட்ட இளம் இயக்குனர்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (17:08 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்க் பெரியசாமியிடம் அட்வான்ஸ் கொடுத்து கதை எழுத சொல்லியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது.

இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக தேசிங்க் பெரியசாமியிடம் ரஜினி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் எனக்கும் ஏதாவது கதை தயார் செய்யுங்கள் எனக் கூறி இருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த ரஜினிக்கு கதை எழுதுவார் தேசிங்க் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து தனக்காக ஒரு கதை எழுத சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதனால் இயக்குனரின் அடுத்த படம் சிவகார்த்திகேயனோடுதான் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ மாஸ்டர் ‘’பட நடிகரின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது…