Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிமாண்டி காலனி 3 படத்தைத் தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

vinoth
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (08:52 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘டிமாண்டி காலனி 2’ படத்தை இயக்கினார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கடந்த ஆண்டின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பேச்சுவார்த்தையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments