Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்கும் மகள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:06 IST)
நடிகை தீபிகா படுகோன், விளையாட்டு வீரரான தனது தந்தையின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தை பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன். இவரது வாழ்கையை படமாக எடுக்கப்போவதாக தீபிகா தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய பேட்டியில், 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று உலக நாடுகள் அனைத்தும் இந்திய விளையாட்டை பற்றி பேசும்படி செய்தது. 
 
ஆனால், அதற்கு முன்பே உலக நாடுகள் இந்தியாவை நோக்கும் படி செய்தவர் என் தந்தை  பிரகாஷ் படுகோன். அவர் 1981 ஆம் ஆண்டு பேட்மிண்டனில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அவரை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 
 
தற்போது சினிமாவில் விளையாட்டை பின்னணியாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. எனவே, என் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் 83 எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர விருக்கும்'கடம்பான்பாறை'!

சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் "சீரன்" திரைப்படம்!!

பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" திரைப்படம் - பூஜையுடன் துவங்கியது!!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments