Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவுக்கு இப்படியொரு பெருமையா?

தமன்னாவுக்கு இப்படியொரு பெருமையா?
, புதன், 31 மே 2017 (18:57 IST)
தமன்னா நடிக்கும் ஹிந்திப் படம், 8கே கேமராவில் படமான முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.


 

 
‘பில்லா 2’ படத்தை இயக்கிய சக்ரி டோலட்டியின் அடுத்த படம் ‘கொலையுதிர் காலம்’. சுஜாதா எழுதிய ‘கொலையுதிர் காலம்’ நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், நயன்தாரா கேரக்டரில் தமன்னா நடிக்கிறார். அவருடன் பிரபுதேவாவும் நடிக்கிறார். இந்தப் படம், 8கே கேமராவில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம், நகைகள், மேக்கப், செட் ஒர்க் போன்றவற்றைத் தெளிவாகப் படம்பிடிக்க முடியுமாம். ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த கேமரா, பாலிவுட்டிலும் தற்போது அறிமுகமாகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கான் விமான விபத்தில் மரணம்? வைரலாகும் வதந்தி