Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
வியாழன், 4 மே 2017 (18:11 IST)
மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


 

 
சில நாட்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை அவமதித்து விட்டார் என ஆதிநாதர் சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மே 5ஆம் தேதி  (நாளை) கமல்ஹாசன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கமல்ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அந்த  மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதித்ததோடு, இந்த வழக்கில் கமல்ஹாசன் நேரில் ஆஜராக தேவையில்லை என அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments