Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (13:44 IST)
சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்வதாக நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு விஷயங்களை கோபமாகவும், கிண்டலாகவும், கேலியாகவும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்து வருகிறது.
 
இவர் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மறைவின் போது ”அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால் பலர் அவரின் கருத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
 
இந்நிலையில்,நடிகை கஸ்தூரி சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர் பொன்குமார் புகார் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments