Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்
, புதன், 24 மே 2017 (21:03 IST)
பிரபல காமெடி நடிகர் புஷ்பா புருஷன் நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்து மாட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 

 
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீராவாக களமிறங்கி வருகின்றனர். இதனால் பின்னால் இருந்த காமெடி நடிகர்கள் தற்போது முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்வர் புஷ்பா புருஷன். 
 
இவர் நடித்து அண்மையில் வெளிவந்த படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்காக கொடுக்கப்பட்ட அறை சௌகரியமாக இல்லை என தன்னுடைய உதவியாளரிடம் அறையை மாற்றுமாறு கூறிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாரம். 
 
படப்பிடிப்பு முடிந்து வழக்கம் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அறை கதவை திறந்தால் அங்கு பெண்கள் கூட்டம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நடிகருக்கு அறை மாற்றுமாறு தன் உதவியாளரிடம் கூறியது நினைவுக்கு வந்தது. அறையை விட்டு வெளியேறி விட்டார்.
 
ஆனால் அறையில் இருந்த பெண்கள் இவர் மீது படை எடுத்து வந்துவிட்டார்களாம். நடிகர் விவரத்தை எடுத்துக் கூறிய பின் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்கா திருமணம் செய்யமால் இருக்க இவர்தான் காரணமாம்