Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் கோமாளி வெற்றிக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:24 IST)
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்துக்கு பிறகு விக்ரம்மை வைத்து படம் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதையடுத்து அவரின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த படத்தை தொடங்குவதற்கு இன்னும் தாமதம் ஆகும் என்பதால் இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை தொடங்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை பிரதீப் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments