Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் கோமாளி வெற்றிக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

மீண்டும் இணையும் கோமாளி வெற்றிக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 21 ஜூன் 2022 (16:24 IST)
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்துக்கு பிறகு விக்ரம்மை வைத்து படம் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதையடுத்து அவரின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த படத்தை தொடங்குவதற்கு இன்னும் தாமதம் ஆகும் என்பதால் இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை தொடங்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை பிரதீப் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு என்ன ஆனது?