Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோவாக அறிமுகமாகும் கோமாளி இயக்குனர்… முன்னணி நிறுவனம் தயாரிப்பில்!

ஹீரோவாக அறிமுகமாகும் கோமாளி இயக்குனர்… முன்னணி நிறுவனம் தயாரிப்பில்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:42 IST)
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்துக்கு பிறகு விக்ரம்மை வைத்து படம் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதையடுத்து அவரின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த படத்தை தொடங்குவதற்கு இன்னும் தாமதம் ஆகும் என்பதால் இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை தொடங்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம்!