Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் ரசிகர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கடும் எச்சரிக்கை

விக்ரம் ரசிகர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கடும் எச்சரிக்கை
, புதன், 22 நவம்பர் 2017 (23:59 IST)
சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு அகில இந்திய சீயான் விக்ரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சூர்யநாராயணன், கலை அழகன், ஆகியோர் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:





சீயான் விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் எந்தவித ஜாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக்கூடாது. மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்மந்தம் இல்லாமல் அண்ணன் சீயான் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் என்ற எண்ணத்தில் மட்டும் ரசிகர்கள் செயல்பட வேண்டும்.

இதற்கு மாறாக மதம், ஜாதி, மற்றும் அரசியல் சம்மந்தப்படுத்தியும், அதன் தலைவர்களை சம்மந்தப்படுத்தியும் ரசிகர்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் செய்திகள் நமது கொள்கைகளுக்கு எதிரானவை மற்றும் கடும் கண்டனத்துக்குரியது.

இதுபோல் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கும் நமது மன்றத்திற்கும் எந்தவித சம்மந்தம் இல்லை என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்து கொள்கிறோம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் வெளியாகிறது நிவின் பாலியின் ‘ரிச்சி’ டிரெய்லர்