Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே ஹோட்டல் அறையில் சித்ரா - ஹேமந்த்: தற்கொலை பின்னணி என்ன?

ஒரே ஹோட்டல் அறையில் சித்ரா - ஹேமந்த்: தற்கொலை பின்னணி என்ன?
, புதன், 9 டிசம்பர் 2020 (10:18 IST)
சித்ரா தற்கொலை குறித்து அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரணை. 
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்ரா, பூவிருந்தவல்லி அருகே, தனியார் ஓட்டலில் அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஹேமந்த் ரவி தங்கியுள்ளார்.
 
ஈவிபி பூங்காவில் அதிகாலை சூட்டிங் முடித்து விட்டு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா புடவையை மின் விசிறியில் மாட்டி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சித்ரா தற்கொலை குறித்து அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ரவியிடம் சென்னை நசரத்பேட்டை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 
 
ஹேமந்த் ரவி போலீஸாரிடம், சித்ரா குளிக்கச் செல்வதாகக் கூறி ரூமிற்கு வெளியே தன்னை செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டு மாற்று சாவி கொண்டு அறையை திறந்தபோது சித்ரா தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது குருதி ஆட்டம் பர்ஸ்ட் லுக் – மிரட்டலான தோற்றத்தில் அதர்வா!