பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் முதல் மற்றும் இந்திய சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமான 'சிவா' வரும் நவம்பர் 14-ஆம் தேதி புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் மறுவெளியாகிறது. இதில் நாகார்ஜூனா, அமலா ஆகியோர் நடித்திருந்தனர்.
மறுவெளியீடு குறித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டு படத்தைப் பாராட்டியிருந்தார். சிரஞ்சீவியின் பாராட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ராம் கோபால் வர்மா பதிவிட்டதில், "நன்றி சிரஞ்சீவி அவர்களே, நான் தெரியாமல் எப்போதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்" என்று எதிர்பாராதவிதமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
முன்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே, வர்மா இவ்வாறு மன்னிப்பு கோரியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுமையான தொழில்நுட்ங்களால் அமைந்த இந்த படம், இன்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.