Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (15:24 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி மகதீரா, ஈகா, பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனர் ஆனார். தற்போது அவர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தை ஹாலிவுட்டின் வால்ட் டிஸ்னி தயாரிக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் வழங்குகிறார்.

இதையடுத்து உலகளவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்துள்ளார் ராஜமௌலி. அவர் இயக்கத்தில் நடிக்க, நடிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் “அவர் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றும் அவர் படத்தில் நடித்துதான் நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” எனக் கூறியுள்ளார் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

இது சர்ச்சையை எழுப்பிய நிலையில் தன்னுடைய பேச்சுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில் “ராஜமௌலி ஒரு படத்துக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். ஆனால் நான் ஒரு ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்கிறேன். இப்போது கூட நான் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். அதனால்தான் அவருடன் நான் பணியாற்ற மாட்டேன் என்று கூறினேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments