Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டப்பிங் யூனியன் பஞ்சாயத்து என்ன ஆச்சு? டிவிட்டரில் மனம் திறந்த சின்மயி!!

டப்பிங் யூனியன் பஞ்சாயத்து என்ன ஆச்சு? டிவிட்டரில் மனம் திறந்த சின்மயி!!
, புதன், 24 ஏப்ரல் 2019 (17:59 IST)
தன்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கியது தொடர்பான வழக்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளதாக சின்மயி டிவிட்டரில் கூறியுள்ளார்.
 
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். அதில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியும் ஒருவர். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு மீண்டும்  இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் வழக்கை நீட்டித்துள்ளது . இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் எந்த இடையூருமின்றி வேலை செய்யலாம் என கூறப்படுகிறது. இதனை சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு பேரு புடவையா? ஐஸ்வர்யா ராஜேஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!