Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூ புகார்: தற்போதைய நிலை என்ன? சீறும் சின்மயி!!!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (13:06 IST)
மீடூ குறித்து புகார் அளித்தபோதும் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என சின்மயி கூறியுள்ளார்.


அண்மையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். சின்மயி இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த பிறகு பல சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய சின்மயி, மீடூ குறித்து போலீஸில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்பட்வில்லை. நாங்கள் நசுக்கப்படுகிறோம். வாய்ப்புகள் எனக்கு குறைய ஆரம்பித்துவிட்டது. டப்பிங் யூனியனிலிருந்து என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் வெற்றி பெறுவேன் என கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்