Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரமுத்துவுக்கு ஆதரவா இத்தனை பேர் பொங்குறது ஏன்? பாடகி சின்மயி

வைரமுத்துவுக்கு ஆதரவா இத்தனை பேர் பொங்குறது ஏன்? பாடகி சின்மயி
, புதன், 26 மே 2021 (13:39 IST)
பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் விவகாரம் குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் பொங்குகின்றனர். ஆனால் நான் வைரமுத்து மீது புகார் கொடுத்தபோது ஒருத்தரும் பொங்க மாட்டேங்குறாங்க, மாறாக வைரமுத்துவுக்கு ஆதரவா பலர் பொங்குறாங்க, ஏனெனெறு தெரியவில்லை என சின்மயி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
லீகலா போங்கன்னு கருத்து தெரிக்க விட்டுட்டு இருக்குற மக்களுகக்கு NCW-ல கேஸ் பதிவு பண்ணி, அவங்க 3 ரிமைண்டர்ஸ் குடுத்து, ஒரு லேடி ஆபீசர் வீட்டுக்கு வந்து, எங்கிட்டயும், என் தாயார், என் கணவர், மூன்று பேர் கிட்டயும் கையழுத்துல கம்ப்ளைன்ட வாங்கிட்டு போயாச்சு. மேடை மேடையா ஏறி திரு ராதா ரவி அவர்கள் என்ன அவமானப்படுத்துனதும் அவசர அவசரமா விசாரணை  பண்ணாம என்ன Ban பண்ணது, எதனாலன்னு எல்லாருக்கும் தெரியும்
 
இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் குடுத்துருக்காங்க. 
@krupage  பல பெண்கள் கிடட பேசி இந்த report பதிவு பண்ணாங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? ரைஹானா Madam - அவர் அப்டித்தான்னு பேட்டி குடுப்பாங்க.  மாலினி யுகேந்திரன் 'என் கண்ணு முன்னாடி நடந்தது’ன்னு சொல்லிருக்காங்க புவனா சேஷன் - அவருக்கு ஒத்துழைக்கலன்னு அவங்க career நாசம் பண்ணி விடடார்னு பேட்டி குடுத்துருக்காங்க Us-லிருந்து சிந்து ராஜாராம் Mediaல பேட்டி குடுத்தாங்க
 
அவர் நடத்துற hostelல பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய்  சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ? "அறியப்படடவர்கள் மீது பழி சுமத்துவது வழக்கமாகிவிடடாது"ன்னும், "ஆதாரங்களை வெச்ச்சுருக்கேன்"னு சொன்னவர், இத்தனை நாள்ள Defamation case போட்டுருக்கலாமே? அதெல்லாம் பண்ணுனா அவர் மன்னிப்பு குடுக்கறேன், என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன  phone call expose ஆகுமே
 
என்ன மட்டும் குறி வைத்து, என் case investigate பண்ணாம, என்ன மட்டும் வேலை செய்ய விடாம ban பண்ணுனது அயோக்கியத்தனம். அத நான் கேள்வி கேக்க கூடாதுன்னு  சொல்றதும் அயோக்கியத்தனம் தான். இத்தனை நாள்ல ஒரு ICC set பண்ணிருக்கலாமே? Independent investigation நடத்திருக்கலாமே? ஏன் பண்ணல? நான் என் குற்றக்காட்டுகளை முன்வைத்தப்போ பார்ப்பனர்களின் சதி, மோடியின் சதி, Rafale லிருந்து divert பண்ண சதி, publicity stuntன்னு , முற்பொற்க்கு, பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு பேசுனாங்க.
 
நக்கீரன் magazineல, பாஜக எனக்கு Bangalore-ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. தெரியாமத்தான் கேக்குறேன். இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? அவரோட அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துறது, மெரட்டுறது உண்மைதான். இது பல ஆண்டுகளா open a நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் யாரு மூடி மறைத்தாலும், இல்லவே இல்லைன்னு பொய் சொன்னாலும்.  நான் கேள்வி கேட்டுகிட்டே டான் இருப்பேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படங்களில் நடிக்கும் முன் கார்த்தி போடும் ஒரே கண்டீஷன் இதுதானாம்!