Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் சில மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Meteorological
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:59 IST)
இன்னும் சில மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பிகில்’ மாரியம்மாவுக்கு திருமணம். வாழ்த்து கூறிய பாண்டியம்மா!