Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை விமர்சித்த தனி நீதிபதி; கருத்துகளை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

விஜய்யை விமர்சித்த தனி நீதிபதி; கருத்துகளை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:02 IST)
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் விஜய்யை விமர்சித்த நீதிபதியின் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு தொடர்ந்திருந்த வழக்கில் தனிநீதிபதி பாலசுப்பிரமணியம், விஜய்யை விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனிநீதிபதி தன்னை ஒரு குற்றவாளி போல் சித்தரிப்பதாகவும், அவர் விமர்சித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஜய் குறித்து தனிநீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயசு 40'ன்னா நம்ப முடியுதா சார்? கியூட்டான லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுத்து சினேகா!