Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகமாக மாறிவரும் கேரளா... சூர்யா தங்கியிருந்த ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு

Advertiesment
தமிழகமாக மாறிவரும் கேரளா... சூர்யா தங்கியிருந்த ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு
, வியாழன், 19 ஜனவரி 2017 (17:51 IST)
கேரளாவில் தனிமனித வழிபாடு குறைவு. அரசியல் தலைவர்களானாலும், சினிமா நட்சத்திரங்களானாலும் ஓரளவுக்கே கொண்டாடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. அதுவும் தமிழ் நடிகர்கள் விஷயத்தில்.

 
மம்முட்டியும், மோகன்லாலும், திலீப்பும், நிவின் பாலியும் எல்லாம் கேரளாவில் சுதந்திரமாகத்தான் நடமாடுகிறார்கள். ஆனால், தமிழ் நடிகர்கள் கேரளாவுக்கு சென்றால் மட்டும் ரசிகர்களின் தள்ளு முள்ளு கட்டுக்கடாங்காமல் போகிறது.
 
விஜய் கேரளா சென்றால் ரசிகர்கள் கூட்டம் அம்மும், தடியடி நிச்சயம். இப்போது சூர்யா சென்றாலும் அதேநிலைதான். எஸ் 3 படத்தை புரமோட் செய்ய திருவனந்தபுரம் சென்ற சூர்யாவை காண விமானநிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். அவர் தங்கியிருந்த ஹேnட்டலிலும் ரசிகர்கள் முண்டியடித்ததில் ஹேnட்டல் கண்ணாடி உடைந்திருக்கிறது. போலீஸ் தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க வேண்டியிருந்திருக்கிறது.
 
இந்த ரசிகர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள தமிழர்கள் என்கின்றன மலையாள மீடியாக்கள். உண்மையா மக்களே...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெகா ஹிட் ஆன மெகா ஸ்டார் படம்!!