Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிவாங்கக் கிளம்பும் வேட்டையன் ஆவி… இதுதான் சந்திரமுகி கதையா?

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (08:49 IST)
சந்திரமுகி 2 படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி உலாவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது இந்த திரைப்படம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதன் படி ‘கொலை செய்யப்பட்ட சந்திரமுகியின் ஆவி வந்து வேட்டையனை பழிவாங்கிய திருப்தியில் சென்றுள்ள நிலையில் முதல்பாகம் முடிவுற்றது. ஆனால் இப்போது வேட்டையன் சந்திரமுகியைப் பழிவாங்க மீண்டும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்’ என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments