Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்: நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:52 IST)
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது

 இன்று டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய கைது சட்ட விரோதம் என்றும்  எனக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதால் தான் நான் பதில் அளிக்கவில்லை என்றும் கவிதா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்த வழக்கில் கவிதா தரப்பு வாதம் அடுத்து நடைபெற உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments