Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தன்னந்தனியாக ரசிகர்களைச் சிரிக்கவைக்க முடியாது” – சூரி

Webdunia
புதன், 3 மே 2017 (15:19 IST)
“தன்னந்தனியாக காமெடி செய்து ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் சூரி.
 
 
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி நடிப்பில் எழில் இயக்கியுள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் பேசிய சூரி, “எழில் சாரின் ‘மனம் கொத்திப் பறவை’ தொடங்கி இந்தப் படம் வரை நான் நடித்துள்ளேன். அவர் எழுதும் கதைக்கும் எப்படியோ நான் வந்துவிடுகிறேன். 
 
எழில் சாரைப் பொறுத்தவரை, காமெடிக்கு முக்கியத்துவம் தருவார். அதனால் தான், பல காமெடியன்களுக்கு அவர் படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வளவு பெரிய காமெடி நடிகராக இருந்தாலும், உடன் சில காமெடி நடிகர்களைச் சேர்த்துக் கொண்டு  நடித்தால் தான் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியும். தன்னந்தனியாக யாரும் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியாது. 
 
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில், என்னை புஷ்பா புருஷனாக ஆக்கினார். அதுவரை ‘பரோட்டா சூரி’யாக  இருந்த நான், இப்போது புஷ்பா புருஷனாக மாறிவிட்டேன். எங்கு சென்றாலும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள். அவ்வளவு ஏங்க… என் மனைவி முன்னாலேயே அப்படித்தான் அழைக்கிறார்கள்” என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments