Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு எந்த படமும் பப்ளிசிட்டி தொகையைக் கூட எடுக்கவில்லை …” தயாரிப்பாளர் சி வி குமாரின் பதிவு

“விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு எந்த படமும் பப்ளிசிட்டி தொகையைக் கூட எடுக்கவில்லை …” தயாரிப்பாளர் சி வி குமாரின் பதிவு
, செவ்வாய், 5 ஜூலை 2022 (15:27 IST)
தயாரிப்பாளர் சி வி குமார் பகிர்ந்துள்ள முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

விக்ரம் ஹிட் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்போது சிறுபட்ஜெட் படங்களைத் தயாரித்து வரும் சி வி குமாரின் முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஜூலை 1 வரை ரிலீஸான எந்த திரைப்படமும் பிரிண்ட் மற்றும் பப்ளிசிட்டிக்காக செலவிடப்பட்ட தொகையைக் கூட வசூல் செய்யவில்லை. ஓடிடி தளங்களின் வருகை தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

T ராஜேந்தரை லண்டனில் சந்தித்த தமிழ் நடிகர்கள்… மீண்டும் அடுக்குத்தமிழில் பேசி அசத்தல்!