Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: சிக்கிய வாலிபர் - தீவிர விசாரணை!

விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: சிக்கிய வாலிபர் - தீவிர விசாரணை!
, செவ்வாய், 29 அக்டோபர் 2019 (13:52 IST)
நடிகர் விஜய் தனது குடும்பத்தினருடன் சென்னனை அருகே உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் அது சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும்  கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.  

 
இதையடுத்து விஜய் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரைண மேற்கொண்டனர். இதையடுத்து இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக விசாரணை நடத்தியதில் சென்னை போரூர் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் என்பது கண்டறியப்பட்டது. 
 
அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில்,  அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறாராம். அண்மையில் தான் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் ரிலீசாகியது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கை குழந்தையுடன் தீபாவளி கொண்டாடிய காஜல் அகர்வால்!