Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

vinoth

, திங்கள், 17 ஜூன் 2024 (07:05 IST)
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் எம் எஸ் பாஸ்கர். பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கர் சமீபத்தில் நடித்த டாணாகாரன் மற்றும் பார்க்கிங் ஆகிய திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றன.

அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகராக இருந்து வரும் எம் எஸ் பாஸ்கர் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லாந்தர் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் “படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். பிடிக்கலைன்னா அமைதியாக இருந்து விடுங்கள். ஒரு படம் எடுக்க நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படத்துக்காக உயிரை விட்டுள்ளார்கள். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. நல்லா உள்ள மற்றும் நல்லா இல்லாத படங்களும் ஓடட்டும். அவர்களுக்கு வாய்ப்பளித்தால் பல குடும்பங்கள் வாழும்” எனக் கூறியுள்ளார்.

எம் எஸ் பாஸ்கரின் இந்த பேச்சு ரசிகர்களிடம் சர்ச்சையைக் கிளப்பியது. அதே பேச்சில் எம் எஸ் பாஸ்கர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார். அதில் “ நான் சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருப்பதையே விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்டு விமர்சகரும் இயக்குனருமான ப்ளு சட்ட மாறன் “பெரிய ஹீரோக்களோடு இவர் நடித்தால் தங்களைத் தாண்டி ஸ்கோர் செய்துவிடுவார் என அஞ்சி இவரோடு நடிக்க மறுக்கிறார்களா” எனப் பற்றவைத்துள்ளார். அவர் சொல்வதற்கு ஏற்ப சமீபகாலமாக எம் எஸ் பாஸ்கர் பெரிய நடிகர்கள் படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!