Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸின் சிண்டுமுடியும் டாஸ்க்: சுரேஷ்-ரியோ மீண்டும் மோதல்!

பிக்பாஸின் சிண்டுமுடியும் டாஸ்க்: சுரேஷ்-ரியோ மீண்டும் மோதல்!
, திங்கள், 19 அக்டோபர் 2020 (12:17 IST)
பிக்பாஸின் சிண்டுமுடியும் டாஸ்க்: சுரேஷ்-ரியோ மீண்டும் மோதல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி அமைதியாகவும் கலகலப்பாகவும் சென்று கொண்டிருந்தால் சுவாரசியம் இருக்காது என்பதால் அதில் அவ்வப்போது மோதலை ஏற்படுத்தும் டாஸ்குகளை வைப்பது பிக்பாஸின் வழக்கம்
 
போட்டியாளர்கள் இடையை சண்டையும் சச்சரவும் வந்து கொண்டிருந்தால் தான் நிகழ்ச்சி சுவராசியமாக செல்லும் என்பது பிக்பாஸ் குழுவினரின் ஐடியாவாக உள்ளது, இந்த நிலையில் ஏற்கனவே ரியோ மற்றும் ஆரி ஆகிய இருவரின் முகமூடிகளை நேற்று பிக்பாஸ் போட்டியாளர்கள் கிழித்து அவர்களை கடுப்பேற்றிய நிலையில் இன்று மீண்டும் சிண்டு முடியும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் வைக்கிறார் 
 
இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக யார் யாரை எல்லாம் நாமினேஷன் செய்யலாம் என்று ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இதில் சுரேஷ் மற்றும் ரியோ ஆகிய இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்படுகிறது. நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் அதை மேலே உள்ளவர் கேட்டிருப்பார் என்று சுரேஷ் கூற, அதற்கு ரியோ, ‘அவருக்கு வேற வேலையே இல்லையா? நீங்கள் சொல்வதெல்லாம் கவனித்துக் கொண்டு உங்களை கேட்டுக் கொண்டிருக்ஜ என்று கூற இருவரும் கிட்டத்தட்ட மோதும் சூழ்நிலை உருவாகிறது
 
மொத்தத்தில் பிக்பாஸின் சிண்டுமுடியும் டாஸ்க் வெற்றிகரமாக இன்று நிறைவேறியது என்று தான் சொல்ல வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க பாப்பா ரொம்ப லக்கி... அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரல்!