Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென குறைந்த பணப்பெட்டியின் மதிப்பு: பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (09:18 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் கடைசி கட்டமாக பணப்பெட்டி அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது என்பதும் பணப்பெட்டியின் மதிப்பு ஒரு லட்சத்தில் தொடங்கி 5 லட்சம் வரை உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று காலை பணப்பெட்டியின் மதிப்பு 9 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து மணி. விசித்ரா. தினேஷ் .பூர்ணிமா உள்ளிட்டவர்கள் பணப்பெட்டியை எடுக்கலாமா என்று யோசனை செய்து வருகின்றனர். 
 
இன்னும் ஒரு சில லட்சங்கள் கூடினால் யாராவது ஒருவர் பணப்பெட்டியை எடுத்துவிட்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென பணப்பெட்டியின் மதிப்பு குறைந்துள்ளது 
 
ஒன்பது லட்சம் ஆக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு திடீரென 3.5 லட்சமாக குறைந்துள்ளதால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒன்பது லட்சம் இருக்கும் போது எடுத்திருக்கலாமோ என்று சில போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர். 
 
இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு கூடவும் செய்யலாம் குறைவும் செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments