Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன அக்கான்னு கூப்பிடுறத நிறுத்து - அர்ச்சனாவின் அம்மா வேஷம் கலைந்தது!

என்ன அக்கான்னு கூப்பிடுறத நிறுத்து - அர்ச்சனாவின் அம்மா வேஷம் கலைந்தது!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (12:55 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்று சண்டை சூடு பிடித்துள்ளது. அர்ச்சனா பாலாவுக்கு இடையில் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. 50 நாட்களுக்கு பிறகு தான் பிக்பாஸ் வீட்டில் ஏதோ நடக்கிறது. கேபிக்காக பாலாவிடம் சண்டையிடும் அர்ச்சனா அம்மாவின் அடுத்த ஆடு பலிக்கு ரெடி அது கேபி என்று உறுதி ஆகிவிட்டது. 
 
எப்படியும் அடுத்த ப்ரோமோவில் கட்டி அணைக்க போறீங்க எதுக்கு இந்த சீனு. இருந்தாலும் சில வாரங்களாக தடம் மாறிப்போன பிக்பாஸ் ரயில் மறுபடியும் சரியான பாதையில் வந்துள்ளது. தயவு செய்து 3வது ப்ரோமோ போடலனாலும் பராவாயில்லை. ஆனால் 3 வது ப்ரோமோவில் அம்மா மகன் சென்டிமென்ட் போட்டு தாக்கி அதுக்கு ஒரு பேக்ரவுண்ட் பாடல் போட்டு சாவடிச்சுடாதீங்க... அர்ச்சனா.... நீ அக்கான்னு கூப்பிடாத என்றதும் உன் காலைப்பிடிச்சு மன்னிப்பு கேட்க இது என்ன என்ன ரியோவா? சோமுவா? நிசாவா? கேபியா?
 
இவர் பாலா.... அவருக்கென்று என்று ஒரு நிபந்தனை அவருக்கென்று ஒரு விதிமுறை அதுதான் இவர். பாலா ஒரு ரகம் ஆரி ஒரு ரகம் இவர்களுக்குள் சண்டை வந்தாலும் இவர்கள் இருவருமே சிறப்பாக மற்றவர்களை மதிப்பீடு செய்து அவரவர் சுயரூபம் வெளி வர செய்கிறார்கள். இந்த இருவரும் வின்னர் ரன்னர் ஆகவேண்டும். மற்றவர்கள் எல்லாமே தற்சமயம் தகுதி இல்லாத போட்டியாளர்தான் என ஆடியன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோகன் பாபுவின் அந்த காட்சி இப்படித்தான் உருவாச்சு - சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!