Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் கையில் பெரிய தடிக்கொம்பு... இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு!

கமல் கையில் பெரிய தடிக்கொம்பு... இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு!
, சனி, 24 அக்டோபர் 2020 (14:23 IST)
பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாள் என்றாலே சுவாரஸ்யம் கூடிவிடும். வாரம் முழுக்க வீட்டில் நடந்த சன்டை வாக்கு வாதங்களை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்க கமலின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ஆடியன்ஸிக்கு நல்ல எண்டெர்டைன்மெண்ட் கிடைத்துள்ளது.

இந்த வராம் வீட்டில் சுரேஷை மரியாதையை குறைவாக பேசிய சனம் ஷெட்டியை கமல் வெளுத்து வாங்குவார் என்பது இந்த ப்ரோமோவிலே தெரிகிறது.  கமல் சுரேஷையும் ரவுண்டு கட்டுகிறார். கொளுத்தி போடுறேன் கொளுத்தி போடுறேன்னு சொன்னவர் கையிலே வெடிச்சுடுச்சு என்றும் செங்கோல் ஒன்றை வைத்துக்கொண்டு கமல் தத்துவம் பேசுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கமல் சார்... ஆரியை பற்றி கொஞ்சம் பேசுங்க...வீட்டில் இருக்கும் எல்லோரும் அவரையே டார்கெட் செய்கிறார்கள். ஷிவானி டாஸ்க் ஒழுங்கா பண்றத்தில்ல.. யார் கூடவும் ஒழுங்கா பேசுறதில்ல அவங்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்தது நியமே இல்ல என மக்கள் கோரிக்கை கமெண்ட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், எனக்கு தெரிஞ்சு.. எப்படியும் இன்னைக்கு பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் தான் பஞ்சாயத்து தான் ஓடும். அது சரி நீங்க உங்களுக்கு என்ன தோணுதுன்னு  இந்த ப்ரோமோவை பாருங்க.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாவர்க்கரைப் போல என்னையும் சிறையில் தள்ளப் பார்க்கிறார்கள் – கங்கனா டிவீட்!