Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தியமா நான் தெரிஞ்சு பண்ணல பிக்பாஸ் - கன்பெக்ஷன் ரூமில் கதறி அழுத சுரேஷ்!

சத்தியமா நான் தெரிஞ்சு பண்ணல பிக்பாஸ் - கன்பெக்ஷன் ரூமில் கதறி அழுத சுரேஷ்!
, புதன், 21 அக்டோபர் 2020 (15:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய  நாடா இல்ல காடா என்ற டாஸ்கின் இரண்டாவது நாளில் சொர்க்கபுரி ராஜா குடும்பம் மற்றும் மாயாபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே சண்டை வெடித்தது. இதில் ஆஜீத் மீது சனம் செட்டி ஸ்ப்ரே அடிக்க அதை பார்த்த சுரேஷ் சனம் ஷெட்டியின் தலையில் கொம்பால் அடித்துவிட்டார்.

இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சனம் ஷெட்டி சுரேஷை "என் கண்ணு போனால் நீ கொடுப்பியா? வாடா , போடா , அவன் இவன் என கெட்ட வார்த்தையில் கண்டமேனிக்கு திட்டிவிட்டார். ஆனாலும், மனம் இறங்காத சுரேஷ் அரக்கன் போல் சிரித்தார். இப்படியாக இரண்டாவது ப்ரோமோ முடிவடைந்தது.

இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கேமரா முன் நின்று கன்பெஷன் ரூமிற்கு போக கேட்கிறார். பின்னர் அவரை அழைத்த பிக்பாஸ் " தெரிஞ்சி பண்ணீங்களா? என கேட்டதற்கு சத்தியமா இல்ல பிக்பாஸ் எல்லாரும் என்ன வச்சு கார்னர் பண்றாங்க. இன்னைக்கு நான் பண்ணது ரொம்ப தப்பு என கதறி அழுத்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்