Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் ‘அசல்’ படத்துக்குப் பிறகு எனக்குத் தமிழில் வாய்ப்பு வரவில்லை எனத் தெரியவில்லை… பாவனா வருத்தம்!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (11:10 IST)
முன்னணி மலையாள மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் திலிப் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு பாவனா திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதன் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “அசல் படதுக்குப் பிறகு ஏன் எனக்கு தமிழ் சினிமாவில் இருந்து அடுதத்டுத்த வாய்ப்புகள் வரவில்லை என்று தெரியவில்லை. எனக்கு சினிமாவில் வழிகாட்டிகள் இல்லை. அதே போல நானும் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்தேன். நிறையப் பேர் என்னைப் பார்க்கும் போது எங்கள் படத்துக்கு கதாநாயகியாக உங்களைதான் நடிக்க வைக்க நினைத்திருந்தோம்” என்று சொல்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்