Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

28 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இணைந்த பாரதிராஜா – படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இணைந்த பாரதிராஜா – படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு!
, திங்கள், 4 ஜனவரி 2021 (10:35 IST)
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருந்த ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் கனவுப்படமான ஆத்தா திரைப்படத்தைக் கைவிட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த படத்துக்காக 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது நண்பர் இளையராஜாவோடு இணைய இருந்தார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

‘என் இனிய தமிழ் மக்களே. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது..
புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவை லவ் பண்ண நிதி அகர்வாலை கட்டாயப்படுத்தினேனா? சுசீந்திரன் விளக்கம்!