Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் பட விவகாரத்தால் ஏற்பட்ட குழப்பம்: முடிவை மாற்றிக்கொண்ட பாக்யராஜ்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:07 IST)
சர்கார் விவகாரத்தால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகிய கே.பாக்யராஜ் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
சர்க்கார் பட விவகாரத்தில் ஞாயத்தின் பக்கம் நின்று கதை திருட்டு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் சர்கார் கதை விவகாரத்தை வெளியே கொண்டுவந்ததால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் தனது முடிவிலிருந்து மாறாத பாக்யராஜ் மீண்டும் 2வது முறையாக தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பினார்.
 
பாக்யராஜ் தலைவர் பதவியில் இருந்து விலகியதன் விளைவாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 21 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் பாக்யராஜ் மீண்டும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
இதனையடுத்து பாக்யராஜ் தனது முடிவை மாற்றி மீண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments