Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டிய பெண்.. போலீசில் புகார்

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (14:40 IST)
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷ்குமார் என்ற சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைத்து மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2023ஆம் ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சென்ற போது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெண்மணி ஒருவர் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் சதீஷ்குமார் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்ததால் செல்போனில் தொடர்புகொண்டு தொடர் மிரட்டல் செய்து வருவதாகவும் சதீஷ்குமார் புகாரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் ஹீரோ கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சதீஷ்குமார். இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் தான் அவருக்கு தொடர்ந்து சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments