Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் தொல்லைகள் இருந்ததால்….சினிமாவில் இருந்து விலகினேன் – பிரபல நடிகை

பாலியல் தொல்லைகள் இருந்ததால்….சினிமாவில் இருந்து விலகினேன் – பிரபல நடிகை
, வியாழன், 28 மே 2020 (16:16 IST)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் தனது  பெயரை பூர்ணியா என்று மாற்றிக் கொண்டு மாற்றி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தார். சின்னத்தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர், இவர் ஆண்டுகளுக்கு முன் ரோஹித் என்பவரை மணந்து கொண்டு பெங்களூரில் இருக்கிறார்.  இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகிய காரணம் குறித்து அவர் முதன் முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது : பெரிய நடிகர்களின் படம் பெரிய தயாரிப்பாளர்களின் படம் என்றால் உங்கள் மகள் தான் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் அதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கேட்பார்கள். இதை அம்மா தேதி என்று நினைத்துக் கொண்டு  என்னை நடிக்க சம்மதிப்பார். அதன்பிறகு அந்த வார்த்தைக்கு பொருள் தெரிந்ததும் , அட்ஜெஸ்மென்ட் என்ற வார்த்தையை கேட்டால் உடனே போனை வைத்துவிடுவார்  என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிஜ விமானத்தையே வெடிக்க வைத்த கிறிஸ்டோபர் நோலன் – ஏன் தெரியுமா?