Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் அட்லி பட ஷூட்டிங்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:14 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 180 நாட்களில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துபாயில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments