Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பை முடித்தது ஆதித்யா வர்மா படக்குழு – ஜூனில் வெளியீடு !

படப்பிடிப்பை முடித்தது ஆதித்யா வர்மா படக்குழு – ஜூனில் வெளியீடு !
, புதன், 15 மே 2019 (14:15 IST)
விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடித்துவரும் ஆதித்ய வர்மா படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான தெலுங்கு ரீமேக் படமான வர்மா தயாரிப்பாளருக்குப் பிடிக்காதக் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. அதேப் படத்தை மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் புதிதாக எடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு படம் முழுவதும் முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் இணை இயக்குனரை வைத்தெ அந்த படத்தை மீண்டும் படம்பிடித்து வருகின்றனர். துருவ் விக்ரம்மை தவிட மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அனைவரும் மாற்ற்ப்பட்டு வருகின்றனர். இரண்டாவது முறையாகப் படமாக்கப்பட இருப்பதால் இம்முறை படக்குழு கவனமாகவும் விரைவாகவும் படப்பிடிப்பை நடத்தி வந்தது. விக்ரம் அடிக்கடி ஆதித்யா வர்மா படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று படப்பிடிப்பைப் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கி வந்தார்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முழுமையாக  முடிவடைந்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்துள்ளது. பின் தயாரிப்பு வேலைகள் முடிந்ததும் இந்த படம் ஜூன் மாதம் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பிக்பாஸ் 3" வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!