Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா இயக்கத்தில் கௌரவ வேடத்தில் ரஜினி… ஹீரோவாக அதர்வா!

ஐஸ்வர்யா இயக்கத்தில் கௌரவ வேடத்தில் ரஜினி… ஹீரோவாக அதர்வா!
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (08:58 IST)
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அது சம்மந்தமான போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் அவர் இப்போது உடனடியாக ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் ஐஸ்வர்யா இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க ரஜினி தயங்கியவதாகவும், ஆனால் ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ்: கொண்டாடும் ரசிகர்கள்!