Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவும் ஐம்பது யானைகளும்

ஆர்யாவும் ஐம்பது யானைகளும்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (12:28 IST)
சினிமா டைட்டில் மாதிரி தெரிந்தாலும் இது சினிமா பற்றிய செய்திதான். கடம்பன் படத்தை பற்றியது.


 
 
மஞ்சப்பை ராகவன் இயக்கும் கடம்பனில் ஆர்யா ஆதிவாசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தாய்லாந்தில் எடுக்கிறார்கள். ஏன்...?
 
தாய்லாந்தில்தான் யானைகள் அதிகம். இந்தியாவில் யானைகள் இருந்தாலும், அவற்றை துன்புறுத்தவில்லை, பட்டினி போடவில்லை, பல் விளக்கவில்லை என்றெல்லாம் வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் ஆயிரத்தெட்டு விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் பீட்டா மாதிரி வேலையற்ற அமைப்புகள் கொடைச்சல் கொடுக்கும். 
 
இந்த எக்ஸ்ட்ரா டென்ஷன் எதுக்கு என்றுதான் தாய்லாந்து. இங்குள்ள யானைப் பண்ணையில் 50 யானைகளை தேர்வு செய்து கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க வைக்கிறார்கள். என்னதான் யானைகள் மனிதர்களுடன் பழகியிருந்தாலும் ஆர்யா யானைகளுடன் பழகியதில்லையே. அதனால், அவரையும் அழைத்துக் கொண்டு யானைகளோடு பழக தாய்லாந்து பறக்கிறார் ராகவன். இந்த வாங்க பழகலாம் செக்ஷன் முடிந்த பிறகே கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
 
ஆர்யா இந்த ஐம்பது யானைகளையும் தனியாளாக அடித்து துவசம் செய்வது போல் காட்சி வைப்பார்களாக என்றுதான் பதைபதைப்பாக இருக்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments