தமிழில் க்ரைம் த்ரில்லர்களின் வரத்து அதிகரித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ஆறாது சினம் ஒரு க்ரைம் த்ரில்லர். அவரது அடுத்தப் படமும் அதே வகையில் தயாராகிறது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மு.மாறன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். மார்ச் 25 சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. முக்கியமான விஷயம், இதில் அருள்நிதி வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்க உள்ளது.