Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்!

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்!
, வியாழன், 3 ஜனவரி 2019 (20:51 IST)
கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருள்நிதி ஒவ்வொரு படத்தையும் கதையை சரியாகவும், தனக்கு பொருத்தமானதாகவும் தேர்வு செய்வதால் அவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு த்ரில் படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர்' K-3' என்ற டைட்டிலை தேர்வு செய்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அருள்நிதிக்கு ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத் நடித்து வரும் இந்த படத்தை பரத் நீலகண்டன் என்பவர் இயக்கி வருகிறார். எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளதாக ஃபர்ஸ்ட்லுக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப்போன சிம்பு படம்: எப்போதான் ராஜாவா வருவீங்க..?