Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசை படைப்புகளுக்கு ஜி.எஸ்.டி? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 6.79 கோடி அபராதம்! – ஜிஎஸ்டி ஆணையர் விளக்கம்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:01 IST)
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்கான காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததாக அவருக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறை விதிகளின்படி ஒரு இசையமைப்பாளர் தனது இசைக்கான காப்புரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு முழுமையாக வழங்கும் பட்சத்தில் அவருக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது காப்புரிமையை முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கவில்லை என அவர் ரூ.6.79 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.

ALSO READ: ஆளவந்தான் மட்டுமில்லை விஜய்யின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்யவுள்ள கலைப்புலி தாணு!

இசை படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களிடம் அளித்துவிட்ட பிறகும் தன்னிடம் வரி வசூலிப்பது நியாயமில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சேவை வரியை செலுத்தாதற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அபராதமாக அதே ரூ.6.79 கோடி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விளக்கம் அளித்த ஜிஎஸ்டி ஆணையர், ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு சேகரித்த  தகவல்களின்படியே அவருக்கு அபராதம் விதிக்கபட்டது என கூறியுள்ளார்.

இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments